Wednesday, November 4, 2015

ராம் ராம்
    
என் தாயார் ஸ்ரீமதி ராஜம்மாள்

Tuesday, September 29, 2009

யதி மகாளையம்

யதி மகாளையம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மற்றும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசிகளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாத பதினைந்தாம் தேதி உத்திர பிரதேசத்தில் அயோத்யா நகரத்தில் சரயு நதிக்கரையில் உள்ள ராமர் ,பாலாஜி ,காமாக்ஷி கோவிலில் நடந்தது . அதில் லக்னோவிலிருந்து நானும் எனது மனைவி திருமதி பானுமதியும் மற்றும் எனது மாணவர்களும் (நாற்பத்தெட்டு மாணவர்கள் ) மற்றும் பத்து முன்னாள் மாணவர்களும் சென்றோம் .அங்கு பம்பாயிலிருந்து திரு ஸ்ரீதர் மற்றும் அவர் நண்பர்களும் ,நாகபுரிலிருந்து திரு மணிய்யர் மற்றும் கிருஷ்ணமுர்த்தி அவர்கள் நண்பர்களும் வருகை தந்தினர் .காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து பிள்ளையார் புஜை புண்ணியாக வசனம் மற்றும் பூஜைகளும் செய்து நூர்ரிஎட்டு யதிகளுக்கு ஆவாஹனம் பாத பிரக்ஷாலனம் செய்து அவர்களுக்கு உபசாரங்களும் செய்து அவர்களிடமுருந்து ஆசீர்வாதம் பெற மதியம் ஒரு மணி முப்பது வினாட்கள் ஆயிற்று . எல்லாம் இனிதே நடந்தது . எஸ் .ஜி ஸ்வாமிநாதன் .